ஐபிஎல் 2019: சென்னைக்கு வந்திறங்கிய பெங்களூரு அணி..

Default Image
  • இந்த சீசன் துவக்கவிழா ஒரு கோலாகலமான துவக்கமாக இல்லாமல் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கப்போகிறது என்பதை பிசிசிஐ அறிவித்தது.
  • முதல் போட்டி மார்ச் 23-ம் தேதி மாலை 8 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 23ஆம் தேதி துவங்க இருக்கிறது. இது 12வது சீசன் ஆகும்.

ஐபிஎல் தொடரின் துவக்க போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரு அணிகளும் மோதுகின்றன. முதல் போட்டி மார்ச் 23-ம் தேதி மாலை 8 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதற்காக பெங்களூரு வீரர்கள் இன்று பெங்களூரில் இருந்து பயிற்சியை முடித்து விட்டு புறப்பட்டு விட்டனர். இந்த செய்தியை பெங்களூரு அணியை அதிகாரப்பூர்வ சமூக வலைதளம் வெளியிட்டது.

இந்த சீசன் துவக்கவிழா ஒரு கோலாகலமான துவக்கமாக இல்லாமல் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கப்போகிறது என்பதை பிசிசிஐ அறிவித்தது.

https://www.instagram.com/tv/BvQ99AwBP0a/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்