KXIPVSRH:திக் திக் திக்!கடைசி ஓவரில் த்ரில் வெற்றிபெற்றது பஞ்சாப் அணி

Default Image

இன்றைய ஐபில் போட்டியில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெறும் 22-வது ஐபில் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி-சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது.இந்த போட்டி மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி  20 ஓவர்கள் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டை இழந்து 150  ரன்கள் மட்டுமே அடித்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 70* ரன்கள் அடித்தார்.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் அஸ்வின்,சமி,முஜீப் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

இதன் பின்னர் தொடக்கத்திலே பஞ்சாப் அணி முதல் விக்கெட்டை  பறிகொடுத்தது.கெயில் 16 ரன்னில் வெளியேறினார்.ஆனால் ராகுல் மற்றும் அகர்வால் ஜோடி நன்றாக விளையாடியது.ராகுல் 71* ரன்கள் அடித்தார். அதேபோல் அகர்வால் 55 ரன்களில் வெளியேறினார்.

பின் 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து  கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணி 151  ரன்கள் அடித்தது.சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சில் சந்தீப்  2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்