RCBVSDC:வேகத்தால் மிரட்டிய ரபாடா!அடிபணிந்த பெங்களூரு அணி!

Default Image

இன்றைய ஐபில் போட்டியில் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.  

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெற்று வரும் 20-வது ஐபில் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி-டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆரம்பத்திலே விக்கெட்டை பறிகொடுத்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விராட் மற்றும் மொயீன் அலி மட்டும் ஓரளவு தாக்கு பிடித்தனர்.மற்றவர்கள் யாரும் சரியாக விளையாடவில்லை.

இறுதியாக  20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கேட்டை இழந்து 149 ரன்கள் மட்டுமே அடித்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் 41,மொயீன் அலி 37 ரன்கள் அடித்தனர்.டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்து வீச்சில் ரபாடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்