ஐபிஎல் போட்டிகள் ரத்து: தமிழ்நாடு போலீஸ் மீது பழியைப் போடும் சுக்லா!

Default Image

 

சென்னையில் மொத்தம் 7 ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் போட்டி பெரும் எதிர்ப்புக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் இடையே நேற்று நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பலத்த எதிர்ப்பை மீறி போட்டி நடைபெற்றதால் சென்னையில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டிக்கு நடுவே பார்வையார்கள் போல் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியினர் மைதானத்துக்குள் செருப்புகளை வீசினர்.

ஐ.பி.எல்., போட்டிகளுக்கு பாதுகாப்பு தர போலீஸ் மறுப்பதால் ஐ.பி.எல்., போட்டிகள் சென்னையில் இருந்து மாற்றப்படுகின்றன என ஐ.பி.எல்., தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். புனே உள்ளிட்ட இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்