IPL Auction 2019:மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர் …!குஷியில் ரசிகர்கள் ..!

Default Image
மோகித் ஷர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.5கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

பிளே-ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியுடன், சிஎஸ்கே மீண்டும் மோதும் நிலை ஏற்பட்டது. லீக் சுற்றில் 2 ஆட்டங்கள், பிளே-ஆப் சுற்றில் ஒரு ஆட்டம் என அனைத்திலும் சிஎஸ்கே வென்றிருந்ததால் உறுதியுடன் களமிறங்கியது.
இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி சென்னை அணி வெற்றி கண்டது. ஷேன் வாட்சனின் அதிரடியான சதத்தால் சென்னை அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது.

12-வது ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் ஜெய்ப்பூரில் இன்று தொடங்கியுள்ளது.இந்த ஏலத்தில் மோகித் ஷர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.5கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதனால் பழைய வீரர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்