IPL 2018: கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு …!விழிபிதுங்கும் சிஎஸ்கே -கேகேஆர் வீரர்கள் …!

Published by
Venu

சென்னை – கொல்கத்தா அணி வீரர்கள்  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நிலையில்  தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், கிரிக்கெட் வீரர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று இரவு 8 மணி நடைபெறவுள்ளது. இதற்காக, சென்னை வந்துள்ள இரு அணி வீரர்களும், ஆழ்வார்பேட்டையில் உள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அரசியல் கட்சியினரும், அமைப்புகளும், கிரிக்கெட் வீரர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளன.

இதனால், கிரிக்கெட் வீரர்கள் தங்கியுள்ள கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிரவுன் பிளாசா நட்சத்திர ஓட்டலின் 3 நுழைவாயில்களும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதுடன், உள்ளே நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. அதேபோல், கிரவுன் பிளாசா ஓட்டலுக்கு வரும் நபர்கள் கொண்டுவரும் உடைமைகளும், பொருட்களும் தீவிரமாக சோதிக்கப்படுகின்றன.

வழக்கமாக, சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வரும் வீரர்கள், போட்டி மற்றும் பயிற்சி இல்லாத நேரங்களில், வெளியிடங்களுக்கும், சுற்றுலா பகுதிகளுக்கும் சென்று வருவார்கள். ஆனால், மிரட்டல் காரணமாக, அவர்களுக்கும் போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதையடுத்து, நேற்று முன் தினமே சென்னை வந்துவிட்ட இரு அணி கிரிக்கெட் வீரர்கள் இதுவரை வெளியிடங்கள் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

34 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

38 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

2 hours ago