IPL 2018:விராத் கோலியை வாயை பிளக்க வைத்த ட்ரென்ட்!அது எப்படி அந்த கேட்ச்!சான்சே இல்ல!இன்னும் ஆச்சரியத்திலிருந்து மீளாதா விராத்!

Default Image

ஐபிஎல்  11-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 19-வது ஆட்டம் பெங்களுரு  மைதானத்தில் நடைபெற்றது.

கிரிக்கெட் உலகம், பெங்களூருவில் நடந்த ஆர்சிபி மற்றும் டெல்லி இடையிலான போட்டியில் போல்ட் பிடித்த கேட்சிற்கு  பாராட்டு தெரிவித்து வருகிறது.

இந்த போட்டியில் விராட் கோலி பவுண்டரி லைனுக்கு விளாசிய பந்தை டெல்லி அணியின் டிரென்ட் போல்ட் அபாரமாக பிடித்தார். அதை பார்த்து விராட் கோலி இது எப்படி சாத்தியம் என்பது போல ஆச்சர்யமாக பார்த்தார். அந்த அளவுக்கு இருந்தது போல்ட்டின் கேட்ச். கேட்ச்சை பார்த்த வர்ணனையாளர்கள் ‘டிரென்ட் போல்ட், என்ன செய்கிறீர்கள்? இதுதான் ஐபிஎல்லில் நாங்கள் பார்த்த சிறந்த கேட்ச்’ என்று ஆச்சர்யம் அடைந்தனர்.கேட்ச்சை பிடித்த டிரென்ட் கூட ஒரு நொடி ஆச்சர்யம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

 

இதுகுறித்து ஆட்டத்திற்கு பின் விராட் கூறும்போது, நான் அந்த கேட்சை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன். இது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தான் நடக்கும். இதுபோன்ற கேட்ச்சில் விக்கெட்டை இழப்பது வருத்தம் அளிக்காது என்று தெரிவித்தார்.

மேலும் டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கூறும்போது, நான் பார்த்ததில் சிறந்த கேட்ச் இது தான் என்றார்.இந்நிலையில் டிரென்டுக்கு கிரிக்கெட் உலகத்தினர் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்