IPL 2018:மும்பை இந்தியன்ஸ் வெளியே! பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா செம ஹப்பி!

Default Image

பிரீத்தி ஜிந்தா அணியான பஞ்சாப்,ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியும் செல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுவது போன்ற காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

Related image

சென்னையுடனான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியுற்றதால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதனால் அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கவலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் சோகத்தில் இருந்து மீண்ட பிரீத்தி ஜிந்தா, தனது அணி பிளே ஆஃபுக்கு முன்னேறாத நிலையில், மும்பையும் செல்லாதது மகிழ்ச்சி என்று கூறிள்ளார்.

பஞ்சாப் அணியின் நிர்வாகி ஒருவருடன் பிரித்தி ஜிந்தா பேசும் இந்த காட்சியில் ஆடியோ இல்லை என்றாலும், அவரது உதட்டசைவை வைத்து பார்க்கையில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாததால் தாம் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவர் கூறுவது போல் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்