IPL 2018:போன வாய்ப்பை பிடித்து இழுத்து தக்க வைத்த சென்னை அணி !இறுதி போட்டிக்கு ஹைதராபாத் அணியை வீழ்த்தி முழு கம்பீரத்துடன் முன்னேறியது!

Default Image

ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார்.

தவண் கோல்டன் டக் அடித்தார். வில்லியம்சனும், கோஸ்வாமியும் ஆடி வந்தார். சிஎஸ்கேவுக்கு அருமையான தொடக்கம்.இதையடுத்து வில்லியம்சன் 24 ரன்களில் விக்கெட்டை பறி கொடுத்தார்.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய சன்ரைஸ் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெற 140 ரன்கள் தேவைபட்டது.

பின்னர் விளையாடிய சென்னை அணி  19.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து , 140 ரன்கள் அடித்து வெற்றி இலக்கை எட்டியது.சென்னை அணியில் அதிக பட்சமாக டு ப்லேசிஸ் 67 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்