Categories: ஐ.பி.எல்

IPL 2018:தொடர்ந்து மூன்று ஐபிஎல் சாம்பியன் ஆன அணிகளில் இடம் பெற்ற ஒரே வீரர் யார் தெரியுமா?

Published by
Venu

 இந்திய வீரர் லெக் ஸ்பென்னர் கரண் சர்மா,2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை ஐபிஎல் சாம்பியன் வென்ற வெவ்வேறு அணிகளில் இடம் பெற்ற ஒரே வீரர் ஆவார்.

ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஒரே அணியில் இடம் பெற்ற வீரர்கள் சிலர் இருந்தாலும் அந்த அணி தொடர்ந்து மூன்று முறை பட்டம் வென்றதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமட்டுமே தொடர்ந்து 2 முறை பட்டம் வென்றுள்ளது. வேறு எந்த அணியும் தொடர்ந்து பட்டம் வெல்லவில்லை.

Image result for karan sharma ipl csk

ஆனால், சாம்பியன் வென்ற வெவ்வேறு அணிகளில் இடம் பெற்ற தொடர்ந்து மூன்று முறை இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் கரண் சர்மா மட்டுமே என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றது. அந்த அணியிலும் கரண் சர்மா இடம் பெற்று இருந்தார். அதன்பின் அடுத்த ஆண்டு நடந்த ஏலத்தில் மும்பை இந்தியன் அணியால் வாங்கப்பட்டார். ஆனால், இவர் போன அதிர்ஷ்டம் 2017-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம்வென்றது. அதன்பின் 2018-ம் ஆண்டு நடந்த ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கரண் சர்மா வாங்கப்பட்டார். சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற கரணம் சர்மா இந்த முறை 6 போட்டிகளில் பங்கேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குறிப்பாக இறுதிப்போட்டியில் முக்கிய விக்கெட்டான வில்லியம்ஸனை வெளியேற்றியதும், கோஸ்வாமியை ரன் அவுட் செய்ததும் கரண் சர்மா ஆவார்.

கடந்த 3 ஆண்டுகளாக தான் இடம் பெற்றிருந்த அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன என்று பெருமையுடன் குறிப்பிட்டு, அணிகளின் ஹெல்மெட்டை வைத்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் கரண் சர்மா பதிவிட்டுள்ளார்.

சிஎஸ்கே அணியில் இடம் பெற்றிருந்த கரண் சர்மா 6 போட்டிகளில் மொத்தம் 9.3 ஓவர்கள் வீசி, 89 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இவரின் எக்கானமி 9.39 ஆகும்.

சிஎஸ்கே அணியில் அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங் இருந்தபோதிலும், இறுதிப்போட்டியில் கரண் சர்மாவுக்கு கேப்டன் தோனியும், பயிறச்சியாளர் பிளெம்மிங்கும் வாய்ப்புக் கொடுத்தனர். தனக்கு கிடைத்த வாய்ப்பை கடைசிப் போட்டியில் வில்லியம்ஸன் விக்கெட்டை வீழ்த்தி கரண் சர்மா நிரூபித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…

31 mins ago

செஸ் ஒலிம்பியாட் : “கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி”! கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேச்சு!

சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…

44 mins ago

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

1 hour ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

2 hours ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

3 hours ago