IPL 2018:டெல்லியிடம் செமையாக அடிவாங்கிய சென்னை!சொதப்பிய மிடில் ஆர்டர் பேட்டிங்!

Default Image

டெல்லி டேர்டெவில்ஸ் அணி ,சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது.

163 ரன்கள் வெற்றி இலக்குடன் விளையாடிய சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, தோனி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.

மறுமனையில் ராயுடுவின் அதிரடி ஆட்டம் விறுவிறுப்பை கூட்டியது. 29 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில் ராயுடு அவுட் ஆனார். சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்