Categories: ஐ.பி.எல்

IPL 2018:கோப்பையை யாருக்கு? நாளை முதல் தொடங்குகிறது கோப்பைக்கான மோதல்!

Published by
Venu

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் ,பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 56 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. மிகவும் எதிர்பார்த்த நிலையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

இந்நிலையில் இறுதிச் சுற்றில் போட்டியிடுவதற்கான அணியை தேர்வு செய்வதற்கான முதல் தகுதிச் சுற்று போட்டியானது நாளை புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகளுக்கிடையே மும்பையில் நடைபெறுகிறது. புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ள ஹைதராபாத் அணியும் 2ம் இடத்திலுள்ள சென்னை அணியும் இதில் மோதுகிறது. வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்குத் தகுதி பெறும்.

இதையடுத்து புள்ளிப்பட்டியலில் 3ம் 4ம் இடங்களை பிடித்துள்ள கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான எலிமினேஷன் போட்டியானது நாளை மறுநாள் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் தோல்வி அடையும் அணி ஆட்டத்தை விட்டு வெளியேறும். வெற்றி பெரும் அணியானது முதல் போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் மோதும்.

முதல் தகுதிச் சுற்றில் தோல்வி அடைந்த அணியும், எலிமினேஷன் போட்டியில் வெற்றி பெற்ற அணியும் மோதிக்கொள்ளும் இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டமானது வரும் 25ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும். தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையேயான  இறுதிப் போட்டியானது 27ம் தேதி மும்பையில் நடைபெறும்.

வெற்றிபெறும் அணி ஐபிஎல் 2018 கோப்பையை கைப்பற்றும். இந்த போட்டிகள் அனைத்தும் குறிப்பிட்ட தேதியில் மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago