IPL 2018:கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா தூக்கி எறிந்த விராட் கோலி!ஐபிஎல் அனைத்து ரெக்கார்டும் கோலியின் பாக்கெட்டில்!

Default Image

 பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கவுதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா சாதனைகளை முறியடித்து, தனி மனிதராக ஜொலித்து வருகிறார்.

11-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. மும்பையில் நேற்று நடந்த 14-வது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 62 பந்துகளுக்கு 92 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன், ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். ரெய்னா 163 இன்னிங்ஸ்களில் விளையாடி 4,558 ரன்கள் சேர்த்து இருந்தார்.

ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விராட் கோலி 92 ரன்கள் சேர்த்தன் மூலம் ரெய்னாவின் சாதனையை முறியடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்சமாக 4,619 ரன்கள் சேர்த்து தற்போது விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். இதற்காக அவருக்கு நேற்ற ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து ஒரே அணிக்காக விளையாடி விரைவில் 5 ஆயிரம் ரன்கள் எட்டப்போகும் முதல் வீரரும் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில், ரெய்னா 4,558 ரன்களுடன் 2-ம் இடத்திலும், ரோகித் சர்மா 4,345 ரன்களுடன் 3-ம் இடத்திலும், கம்பீர் 4,210ரன்களுடன் 4-ம் இடத்திலும், டேவிட் வார்னர் 4014 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.

 

அதுமட்டுமல்லாமல், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிகமான அரைசதம்அடித்தவர்கள் பட்டியலில் டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் 53 அரை சதங்களுடன் முதலிடத்தில் இருந்தார். ஆனால், நேற்றைய போட்டியில் விராட் கோலி தனது 54-வது அரைசதம் அடித்தது கம்பீரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்த ஐபிஎல் போட்டிகளில் இதுவரை தனிஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், பெங்களூரு அணிக்கு எதிராக 92 ரன்கள் சேர்த்தே அதிகபட்சமாக இருந்தது.

ஆனால் அந்த சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முறியடித்தார். பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 94 ரன்கள் சேர்த்ததே நடப்பு ஐபிஎல் போட்டியில் தனி ஒரு வீரரின் அதிகபட்சமாகும்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்