சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி , இன்றைய போட்டியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் சென்னை அணியின் தல தோனி மற்றும் சின்னதல ரெய்னா ஆகியோர் விளையாடுவார்களா மாட்டார்களா என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் கடந்த இரண்டு தொடர்களில் விளையாடாமல் இந்த தொடரில் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே பல சோதனைகளை சந்தித்து வருகிறது.
தொடர் துவங்குவதற்கு முன்னதாகவே மிட்செல் சாட்னர் காயம் காரணமாகவே தொடரில் இருந்து விலகிய நிலையில் முதல் போட்டியிலேயே சென்னை அணியால் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட கேதர் ஜாதவும் காயமடைந்து தொடரில் இருந்து விலகினார், இதே போல் பலரும் தொடர்ந்து காயமடைந்து வருகின்றனர், போதாக்குறைக்கு தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்ட காவிரி மேலாண்மை குறித்த ஆர்பாட்டத்தால் சென்னையில் நடைபெற இருந்த போட்டிகள் அனைத்து புனேவிற்கு மாற்றப்பட்டது.
இப்படி பல பிரச்சனைகள் சென்னை அணியை சுற்றி நடந்து வருவதால் ஏற்கனவே கடுப்பில் உள்ள சென்னை ரசிகர்களுக்கு மேலும் பெரும் அதிர்ச்சியாக இரண்டாவது போட்டியின் போது சுரேஷ் ரெய்னாவும், மூன்றாவது போட்டியின் போது தோனியும் காயமடைந்தனர்.
இதன் காரணமாக ராஜஸ்தான் அணியுடனான இன்றைய போட்டியில் தோனி மற்றும் ரெய்னா களமிறங்குவார்களா இல்லையா என்ற கேள்வியும், பயமும் சென்னை ரசிகர்கள் மத்தியில் நிலவி வரும் நிலையில், தோனி மற்றும் ரெய்னா இன்றைய போட்டியில் விளையாட அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளதாக சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசீ தெரிவித்துள்ளார்.
இது குறித்து மைக் ஹசீ கூறியதாவது, “நான் தோனியிடம் இது குறித்து பேசினேன். அவர் தற்பொழுது நலமாக உணர்வதாக அவரே கூறினார், இது தவிர இரண்டாம் நாள் பயிற்சியிலும் அவர் ஈடுபட்டதால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே போல் சுரேஷ் ரெய்னாவும் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு முழு உடற்தகுதியுடன் உள்ளார், இதன் காரணமாக அவர்கள் இருவரும் இன்றைய போட்டியில் விளையாடுவார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…