IPL 2018:இந்த போட்டியில் எல்லா புகழுக்கு காரணம் இவருதான்! அவர் மீண்டும் டாப் தான்னு நிரூபித்திருக்கிறார்!அஷ்வின் புகழாரம்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றிப்பெற்றது.
ஐபிஎல் தொடரின் 50-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. குருணால் பாண்டியா 23 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பொல்லார்டு 23 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி பந்துவீச்சில் ஆண்ட்ரூ டை 4 விக்கெட் வீழ்த்தினார். இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 187 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.
அதைத்தொடர்ந்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக லோகேஷ் ராகுல், கிறிஸ் கெயில் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். ஹர்திக் பாண்டியா வீசிய 3-வது ஓவரில் பஞ்சாப் வீரர்கள் ஒரு சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகள் உட்பட 19 ரன்கள் கிடைத்தது. 4-வது ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். அந்த ஓவரில் கிறிஸ் கெயில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஆரோன் பிஞ்ச் களமிறங்கினார். அவர் ராகுலுடன் இணைந்து பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் 36 பந்தில் அரைசதம் அடித்தார். பிஞ்ச் 35 பந்தில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அக்ஸார் பட்டேல் களமிறங்கினார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது.
ராகுல் 60 பந்தில் 94 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். அதன்பின் யுவராஜ் சிங் களமிறங்கினார். கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை மிச்செல் மெக்லினெகன் வீசினார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. மும்பை அணி பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட்களும், மிச்செல் மெக்லினெகன் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை மும்பை அணி தக்கவைத்து கொண்டது.
தோல்விக்குப் பின் பேசிய பஞ்சாப் கேப்டன் அஸ்வின், ’இந்த நேரம் ஒன்றும் தோன்றவில்லை. மனம் வெறுமையாக இருக்கிறது. நாங்கள் சிறப்பாகவே சேஸிங் செய்துகொண்டிருந்தோம். இந்தப் போட்டியில் தொழில்முறை பேட்டிங் செயல்பாட்டைக் காட்டினோம். இருந்தாலும் இறுதியில் அது எங்களுக்கு சாதமாக நடக்கவில்லை. இதற்கான புகழ் பும்ராவையே சேரும். தான் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை அவர் மீண்டும் நிரூபித்திருக்கிறார். இந்தத் தோல்வியை அடுத்து அதிர்ஷ்டத்தை நம்பி இருக்கிறோம். கடந்த போட்டியில் எங்கள் செயல்பாடு பற்றி வீரர்களுடன் விவாதித்தோம். அதையடுத்து இந்தப் போட்டியில் நன்றாகவே விளையாடினோம். ராகுலும் ஆரோன் பின்ச்சும் சிறப்பாக செயல்பட்டனர். கடைக்கட்டத்தில் ராகுல் செய்தது (பும்ரா பந்தை தூக்கி அடித்தது) தவறா சரியா என்பது பற்றி சொல்வது கடினம்’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024![chennai rains](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/chennai-rains-2.webp)
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024![Mumbai Boat Accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Mumbai-Boat-Accident.webp)
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)