IPL 2018:அஷ்வினின் ஆதிக்கம் ஐபிஎல்லில் தொடக்கி விட்டது! உண்மையிலே அஷ்வின் கிரேட் !கபில் தேவ்

Published by
Venu

இந்திய அணியின்  முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஐபிஎல் 11-வது சீசன் போட்டியில் லெக் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். சிறப்பாக ஆப் ஸ்பின் வீசக்கூடிய அஸ்வின் கூட லெக்ஸ்பின்னுக்கு மாறிவிட்டார் என்று  புகழாரம் சூட்டியுள்ளார்.

மும்பையில் கிரேமேட்டர் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் கிரிக்கெட் காமெடி ஷோ நடந்தது. இதில் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றார்போல் ஒவ்வொரு பந்துவீச்சாளரும், ஒவ்வொரு விதமாகப் பந்துவீச்சை தேர்வு செய்கிறார்கள்.

ஆனால், ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் தற்போது நடக்கும் ஐபிஎல் போட்டிவரை எனக்குத் தெரிந்து லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் மிகுந்து காணப்படுகிறது. அவர்கள்தான் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்கான துருப்புச்சீட்டாக இருந்து வந்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு அணியிலும் லெக்ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.ஏன் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ஆப்-ஸ்பின்னராக இருந்தால் கூட அவரே இப்போது லெக் ஸ்பின் வீசும் அளவுக்கு மாறிவிட்டார். இதிலிருந்தே தெரிகிறது லெக்ஸ்பின்தான் வெற்றிகரமான பந்துவீச்சாக மாறிவருகிறது என்பதை அறியலாம். அதனால் மற்ற பந்துவீச்சாளர்களைக் காட்டிலும் லெக்ஸ்பின்னர்கள் வெற்றியாளர்களாக இருந்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் கரண் சிங் என்ற லெக்ஸ்பின்னர் இருந்தால்க கூட, கூடுதலாக இம்ரான் தாஹீர் ஒருவர் இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள மார்க்கண்டே சிறப்பாக லெக் ஸ்பின் வீசுகிறார். சிறந்த லெக்ஸ்பின்னர் ஒருவர் இருந்தால், அணிக்குக் கூடுதல் பலமாகவே இருக்கும் என நான் கருதுகிறேன். புவனேஷ்வர் கடந்த 3ஆண்டுகளாகச் சிறப்பாக பந்துவீசிவருகிறார். இந்த 3 ஆண்டுகளில் பல விஷயங்களைக் கற்று, நன்கு தேறி இருக்கிறார்.

என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் மட்டுமல்ல, கிரிக்கெட் என்பதே பேட்ஸ்மேன்களுக்கான கேமாகும். ஒருபோதும் பந்துவீச்சாளர்களுக்கான போட்டியாக இருக்காது. ஐபிஎல் தொடங்கிய நிலையிலும் கூட அது பந்துவீச்சாளர்களுக்கான போட்டியாக மாறியது இல்லை. டி20 போட்டிகள் பேட்ஸ்மன்கள் திறமையைவளர்த்துக்கொள்ள மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களும் தங்களை முன்னேற்றிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாகும் என்று இந்திய அணியின்  முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

13 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

21 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago