IPL :கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஐதராபாத்..!!

Default Image

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாஹா 35 ரன்கள் எடுத்தார்.

175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் நரைன், லின், சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பின்னர் வந்த வீரர்கள், ரஷித் கான் சுழற்பந்தில் சிக்கி விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி, 160 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஐதராபாத் அணி, நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்