சென்னையின் சூழலில் சிக்கி சின்னாபின்னமான பெங்களூரு அணி, 70 ரன்களில் சுருண்டது

Published by
Vignesh

ஐபில் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின.

டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. துவக்க வீரர்களாக களமிறங்கிய பெங்களூரு அணியின் பார்த்தீவ் பட்டேல் மற்றும் விராட் கோலி இருவரும் துவக்கம் முதலே திணற துவங்கினர். கேப்டன் விராட் கோலி ஹர்பஜனின் பந்தில் கேட்ச் கொடுத்து முதலில் வெளியேற அதன்பின் அவரை தொடர்ந்து மொயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஹர்பஜன் பந்தில் வெளியேறினார்.
8 ஓவர்கள் முடிவில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூரு அணி. 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். இவர் வீழ்த்திய 3 விக்கெட்டுகளும் மிக முக்கியமானவை. தீபக் சஹர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை என்றாலும் மிக அற்புதமாக ரன்களை கட்டுப்படுத்தினார்.
அதன்பின் வந்த இம்ரான் தாஹிர், அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார்.
பின்னர் ஜடேஜா இவரும் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பெங்களூரு அணி.
அடுத்ததாக பிராவோ பந்து வீசிய முதல் பந்தில் கேதர் ஜாதவ் வசனம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் வெளியேறினார் பார்த்தீவ் பட்டேல். இறுதியாக 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது பெங்களூரு அணி.
அதிகபட்சமாக பார்திவ் படேல் 29 ரன்கள் எடுத்தார். அணியில் இவர் ஒருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்திருந்தார்.
சென்னை அணிக்கு 71 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
Published by
Vignesh

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago