தினேஷ் கார்த்திக் அடியில் வென்றது மறக்க முடியாத ஒரு உணர்வு !

Published by
Venu

நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு தொடரில் இந்திய டி20 அணியின் வளரும் புதிய ஆஃப் ஸ்பின் வீரர் வாஷிங்டன் சுந்தர்  அருமையாக வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அதுவும் பேட்ஸ்மென்கள் புத்துணர்வுடன் களமிறங்கும் போது பவர் பிளேயில் பந்து வீசும் கலையில் அவர் நிறைய தேறி வருகிறார்.

ஆட்டத்தில் சூடுபறக்கும் தருணங்களில் வாஷிங்டன் சுந்தர் மிகவும் கூலாக வீசுவது இவரது பலம். இன்று ரிஸ்ட் ஸ்பின் என்று கூறி அஸ்வினை ஓரங்கட்டிய பிறகே விரல்களால் வீசும் பாரம்பரிய ஸ்பின் இனி எடுபடாது என்ற பிரச்சாரங்களை மீறி வாஷிங்டன் சுந்தர், அதுவும், குறைந்த ஓவர் போட்டிகளில் அசத்துவது விரல்களின் மூலம் வீசும் ஸ்பின்னர்களுக்கு ஒரு புத்துணர்வூட்டுவதாக் அமைந்துள்ளது. இவரது ஆல் ரவுண்ட் திறமைக்கு இன்னும் வாய்ப்புக் கிடைக்கவில்லை, அந்த வாய்ப்பும் கிடைத்து திறமையை நிரூபித்தால் இந்திய அணியில் இவருக்கு ஒரு நிரந்தர இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதுவும் ஒழிந்து விட்டதாக கடுமையாகப் பிரச்சாரம் செய்யப்படும் பாரம்பரிய ஆஃப் ஸ்பின் பந்து வீச்சில் சிறந்த சிக்கன விகிதத்துடன் அதிக விக்கெட்டுகளையும் ஒரு தொடரில் கைப்பற்றி தொடர் நாயகன் விருது பெற்றிருப்பது சாதாரணமல்ல. யஜுவேந்திர சாஹலும் இவரும் 8 விக்கெட்டுகள். எனவே இருமுனைகளிலும் ரிஸ்ட் ஸ்பின் தோல்வியடையும் போது ஒரு முனையில் இந்த பாரம்பரிய ஸ்பின் பந்து வீச்சே கைகொடுக்கும் என்பதற்கு வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு ஒரு உதாரணம், ஆனால் அவர் தன் திறமையை தொடர்ந்து நிரூபிக்க வேண்டி வரும், இன்னும் சவாலான அதிரடி பேட்ஸ்மென்களை இவர் சந்திக்கவில்லை. இவர் நல்ல யார்க்கர் பந்துகளையும் வீசக்கூடியவர் என்று பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.

ஏரோன் பிஞ்ச், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், வார்னர் உள்ளிட்டோருக்கு அவர் வீசி நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது.

இந்நிலையில் முத்தரப்பு டி20 சாம்பியன் இந்திய அணி திரும்பியுள்ளது, வாஷிங்டன் சுந்தர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறியதாவது:

உண்மையில் பேருணர்வு ஏற்பட்டது மகிழ்ச்சி. எனக்கு வயது 18, ஒரு முழு தொடர் இந்த வயதில் கிடைத்தது. இலங்கையும் வங்கதேசமும் அபாயகரமான அணிகள். எங்களுக்கு நெருக்கடி இருந்தது. மறக்க முடியாத ஒரு வெற்றியாக இது அமைந்தது.

பவுலர் என் பந்தை அடித்தாலும் சோர்ந்து விடாமல் என் அடுத்த பந்து சிறந்ததாக இருக்கும் என்று எனக்கு நானே கூறிக்கொள்வேன். பேட்ஸ்மென்கள் பந்து இங்குதான் பிட்ச் ஆகும் என்று எதிர்பார்ப்பதை முறியடிக்க வேண்டும் என்பதுதான் திட்டம்.

தினேஷ் கார்த்திக் அடியில் வென்றது மறக்க முடியாத ஒரு உணர்வை ஏற்படுத்தியது, தினேஷ் கார்த்திக் சிறப்பான ஒன்றை நிகழ்த்துவார் என்று நம்பினேன், அதுதான் நடந்தது என்று வாஷிங்டன் சுந்தர் கூறினார் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

10 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

18 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago