என் பெயரை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் ! மகேந்திர சிங் தோனி தனியார் நிறுவனம் மீது வழக்கு !

Published by
Venu

இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, அனுமதியின்றி தனது பெயர் பயன்படுத்துவதாக  தொடர்ந்த வழக்கில் தனியார் நிறுவனத்துக்கு டெல்லி  நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பல தனியார் நிறுவனங்களுக்கு விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார். உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர் என்பதால் விளம்பரம் மூலமாகவே ஆண்டொன்றுக்கு பல நூறு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

இந்நிலையில், தன்னுடனான ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் தனது பெயரை பயன்படுத்தி விளம்பரம் செய்து வருவதாக மேக்ஸ் மோபிலிங்க் எனும் தனியார் நிறுவனத்தின் மீது மகேந்திர சிங் தோனி, டெல்லி  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அந்த நிறுவனத்துடன் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் விளம்பர ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டது. இதையும் மீறி எனது பெயரையும், புகைப்படத்தையும் அவர்களின் நிறுவன விளம்பரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே அதை உடனடியாக நிறுத்தவும், இதுவரை பயன்படுத்தியதற்கான ஊதியத்தை வழங்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அதன் உரிமையாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago