ஐபிஎல் 2024 : ஒன்று கூடும் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ..!! ஐபிஎல்லின் அடுத்த கட்ட திட்டம் என்ன ..?

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : வருகிற ஏப்ரல்-16 ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சந்திப்பு.

ஐபிஎல் தொடரின் 31-வது போட்டியாக ஏப்ரல் 16-ம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணி ஆட்டமாக நடைபெறுகிறது. அன்று நடைபெறுகிற இந்த போட்டியின் போது ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஒன்றாக சந்தித்து பேச உள்ளதாக தற்போது ஐபிஎல் சி.இ.ஓ (CEO) ஆன ஹேமங் அமீன் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் .

இந்த சந்திப்பு ஐபிஎல்லில் நிலவி வரும் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை தீர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்த சந்திப்பு வர விருக்கும் மெகா ஐபிஎல் ஏலத்தை பற்றியும் விவாதிக்க உள்ளதாக தெரிகிறது என்று ஊடகங்கள் வாயிலாக தெரிகிறது. மேலும், ஐபிஎல்லின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கில் இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,

இந்த சந்திப்பிற்கு பத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. அதனால், 10 அணிகளின் உரிமையாளர்கள் தங்கள் CEO-க்கள் மற்றும் குழுவினர்களோடு கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமால் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கான முக்கிய காரணம் ஏலத்தின் போது அணிகள் தங்களது பிரபலமான வீரர்களை தக்க வைத்து கொள்வது, அதிக காசு கொடுத்து எடுக்கும் வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளாமல் இருப்பது, மேலும் ஐபிஎல் தொடரை முன்னோக்கி கொண்டு போக அடுத்தகட்ட நடவடிக்கை போன்ற விஷயங்களையும் விவாதிக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

8 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

9 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

10 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

13 hours ago