மிகவும் எதிர்பார்க்கப்பட்ட T20 தொடர் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான (ஐபிஎல்) அடுத்த ஐந்தாண்டுகளுக்கான(2023 முதல் 2027 வரையிலான) ஒளிபரப்பு ஊடக உரிமைகளுக்கான மின்-ஏலம்(E-auction) நேற்று தொடங்கிய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.இந்த ஏலத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI),சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா,டிஸ்னிஸ்டார்,Zee என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ், வியாகாம் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.
இதற்கிடையில்,ஏல செயல்முறை மொத்தம் நான்கு தொகுப்புகளாக (A, B, C மற்றும் D) பிரிக்கப்பட்டுள்ளது.பேக்கேஜ் A என்பது இந்தியாவில் போட்டியை ஒளிபரப்பு செய்வது,B தொகுப்பு என்பது இந்தியாவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வது,C பேக்கேஜ் என்பது எக்ஸ்க்ளூசிவ் போட்டிகளை மட்டும் ஓடிடி ஒளிபரப்பு செய்வது,கடைசியாக,பேக்கேஜ் D என்பது இந்தியாவைத் தவிர உலகின் பிற பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த (டிவி மற்றும் டிஜிட்டல்) உரிமம் பெறுவதாகும்.
ஒவ்வொரு பேக்கேஜ்ஜின் அடிப்படை விலை:
இந்நிலையில்,ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைக்கான ஏலம் ரூ.43,255 கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் ரூ.23,575 கோடிக்கும்,அதைப்போல,இந்தியாவில் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் ரூ.19,680 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே,சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…