ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான 13 வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் குறைந்தால் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்பைவிட இருமடங்காக அதிகரித்து வருகிறது. இதனால் ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. கிரிக்கெட் போட்டியை விட மக்களின் நலனே முக்கியம் என்றுதான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தங்கள் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்தது. இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் பிசிசிஐக்கு ஐபிஎல் போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ நிறுவகத்தின் பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது என்றும் ஆனால் இப்போது உள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது என கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பும், உடல் நலனும் இப்போது முக்கியம் என்றும் உலகமே பெரும் இழப்பை சந்தித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறியுள்ளார். இதற்கிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…