ஐபிஎல் தொடரின் இரண்டாம் நாளான இன்று, டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாயில் நடைபெறவுள்ளது.
உலகளவில் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா அதிகளவில் பரவி வரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கியது. அதன்படி முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதியது.
அபுதாபியில் நடைபெற்ற அந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தநிலையில் இரண்டாம் போட்டியான இன்று, டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, துபாயில் உள்ள துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் ரஹானே இடம்பெற வாய்ப்புகள் கம்மி என டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி அணி, ஒரு தொடரில் கூட இறுதிசுற்று வரை வராத நிலையில், இந்தாண்டு சிறப்பாக விளையாடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கொல்கத்தா : நைட் ரைடர்ஸ் (KKR) அணியைச் சேர்ந்த இளம் ஆல்-ரவுண்டர் ரமன்தீப் சிங். இவரை இந்த ஆண்டு கொல்கத்தா அணி…
சென்னை : மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2025-2030 ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்துள்ளன. அதன்படி, டேங்கர்…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் நேற்று காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையை உலுக்கியுள்ள நிலையில்,…
அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல்…
வாஷிங்டன் : அமெரிக்கா வாக்குப்பதிவு நடைமுறைகளில் சில குளறுபடிகள் உள்ளதாகவும், அதனை திருத்தி இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளில் உள்ள…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை…