மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்.
ஐபிஎல் 2022-இன் 15-வது சீசனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பை பிரபோர்ன் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. பிற்பகல் நடைபெற்ற இப்போட்டியில், மும்பையை அணியை வீழ்த்தி டெல்லி அதிரடியான முதல் வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்தது.
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக இஷாந்த் கிஷன் 81 ரன்களும், ரோஹித் சர்மா 41 ரன்கள் அடித்து அசத்தினார்கள். மும்பை அணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், டெல்லி அணி அபாரமாக விளையாடி 18.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இதனிடையே, இறுதி கட்டத்தில் டெல்லி அணியின் பேட்டர்களின் அதிரடியான ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணி பந்துவீச்சாளர்கள், பந்துவீச்சில் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டனர். இந்த நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.
ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில் இரண்டாவது பாதியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாமல், மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஊதியத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…