ஐபிஎல் 2025 : ஏலத்தில் ஆர்சிபி விடுவிக்கப் போகும் வீரர்கள்! இவரும் உண்டா?

Published by
அகில் R

ஐபிஎல் 2025 : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் முடிவடைந்ததிலிருந்து அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது. அதற்குக் காரணம் நடைபெறும் போகும் ஐபில் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கான புதிய விதிமுறைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்குச் சமீபத்தில் இதற்கென ஒரு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

அதில் அவர்கள் பேசிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் ஒரு சில தகவல்கள் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் நட்சத்திர அணிகளுள் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வரும் முக்கிய வீரர்கள் ஒரு சிலரை அந்த அணியின் நிர்வாகம் நடைபெறப் போகும் இந்த மெகா ஏலத்தில் விடுவிக்க உள்ளதாக ஒரு தகவல் கசிந்து வருகிறது.

ஆர்சிபி தக்க வைக்கப் போகும் வீரர்கள் :

  • விராட் கோலி – பேட்ஸ்மேன்
  • ரஜத் படிதார் – பேட்ஸ்மேன்
  • கிளென் மேக்ஸ்வெல் – ஆல் ரவுண்டர்
  • வில் ஜாக்ஸ் – ஆல் ரவுண்டர்
  • முகமது சிராஜ் – பவுலர்
  • யாஷ் தயாள் – பவுலர்

இந்த 6 வீரர்களைத் தவிர மற்ற எல்லா வீரர்களையும் ஆர்சிபி விடுவிக்க உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக இந்த பட்டியலில் அணியின் தற்போதைய கேப்டனாக இருக்கும் டூ பிளெஸ்ஸி மற்றும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் என முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. இதனால் இருவரையும் பெங்களூரு அணியிலிருந்து விடுவிக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும், இதற்கு முன்னர் மும்பை அணியின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா மும்பை அணியால் விடுவிக்க உள்ளதாகவும் அவரை பெங்களூரு அணி ஏலத்தில் வாங்க உள்ளதாகவும் ஒரு பேச்சு சமீபத்தில் பேசப்பட்டது. அதன்படி இந்த பட்டியலை ஒப்பிட்டுப் பார்க்கையில் ஒருவேளை அது உண்மையாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இப்படி ஒரு நட்சத்திர ஆல் ரவுண்டரையும், ஒரு பேட்ஸ்மேனையும் விடுவிப்பதால் பெங்களூரு அணியால் அவர்களது வாலட்டை உயர்த்திக் கொள்ள முடியும் என்பதற்காகவே இந்த முக்கிய வீரர்களை விடுவிக்கலாம் எனத் தெரிகிறது. பெங்களூரு அணியின் கேப்டனாக டூ பிளெஸ்ஸி செயல் பட்ட இந்த 2 வருடமும் அணிக்குக் கோப்பை வாங்கி தர முடியவில்லை என்றாலும் ஒரு சிறப்பான கேப்டனாகவே செயலாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago