ஐபிஎல் 2025 : “கொஞ்சம் புத்திசாலித்தனமா நடந்துக்கோங்க”! ஆர்சிபி ரசிகரை விளாசிய ரிஷப் பண்ட்!

Published by
அகில் R

சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் எனவும் RTM மூலமாக எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க முடியாது எனவும் நேற்று ஒரு தகவல் பரவலாக பரவி வந்தது.

இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் ஐபிஎல்லில் விளையாடி வரும் பல நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் வேறு அணிகளுக்கு செல்ல உள்ளதாக அவ்வப்போது சில தகவல்கள் வெளியாகி வந்தது. அதன்படி டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டனாக செயலாற்றி வரும் ரிஷப் பண்ட் அந்த அணியிலிருந்து வெளியேறி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ளார் என ஒரு பேச்சுக்கள் அடிபட்டது.

மேலும், ரசிகர்கள் இடையே பேச்சுவார்த்தையாக இருந்த இந்த தகவல் நேற்று பெங்களூரு ரசிகர் ஒருவரால் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்தது. அந்த ரசிகர் அவரது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், ‘பெங்களூரு அணியுடன் ரிஷப் பண்ட் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் எனவும், டெல்லி அணியில் விளையாடுவதற்கு விரும்பாமல் பெங்களூரு அணியில் விளையாடுவதற்கு அந்த அணியின் உரிமையாளரை தொடர்பு கொண்டதாகவும், இதற்கு விராட் கோலி மறுப்பு தெரிவித்ததாகவும்’ என இப்படி ஒரு பொய்யான தகவலை பரப்பி இருந்தார்.

இந்தப் பதிவிற்கு கடுப்பான ரிஷப் பண்ட் அவருக்கும், இதர ரசிகர்களுக்கும் பதிலளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,“இது முற்றிலும் பொய்யான செய்தி. சமூக வலைதளங்களில் ஏன் இது போன்ற போலியான செய்திகளை பரப்புகிறீர்கள்?. கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருங்கள். எக்காரணம் கொண்டு நம்பத்தகாத தகவலை பரப்பாதீர்கள். இது முதல் முறையுமல்ல, கடைசியாகவும் இருக்கப்போவதில்லை.

ஆனால் நான் இதை சொல்லியே ஆக வேண்டும். தயவு செய்து எப்போதும் ஒரு தகவல் வந்தால் ஆதாரங்களை சரி பார்க்கவும். ஒவ்வொரு நாளும் அது மோசமாகி வருகிறது. மற்ற அனைத்தும் உங்களைப் பொறுத்தது. இது உங்களுக்கு மட்டுமல்ல. தவறான தகவல் பரப்பும் அனைத்து நபர்களுக்குமான பதில்”, என ரிஷப் பண்ட் பதிலளித்து பதிவிட்டிருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

11 minutes ago

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…

35 minutes ago

CSKvsRR: கடைசி நேரத்தில் சொதப்பிய சென்னை! தோல்விக்கான முக்கிய காரணங்கள்?

குவஹாத்தி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது சற்று தடுமாறி விளையாடி வருகிறது. உதாரணமாக சொல்லவேண்டும்…

1 hour ago

#RRvCSK: தொடர் தோல்வியில் சென்னை… முதல் வெற்றியை ருசித்த ராஜஸ்தான்..!

இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…

8 hours ago

#RRvCSK: மிரட்டி விட்ட நிதிஷ் ராணா…. 183 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..!

இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…

10 hours ago

முடிச்சிவிட்டீங்க போங்க! ஹைதராபாத்தை ஓட விட்ட டெல்லி..7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…

13 hours ago