2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனா பரவலுக்கும் மத்தியில் மைதானத்தில் ரசிகர்களின்றி, 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள், அமீரகத்தில் நடைபெற்று வெற்றிகராக நிறைவடைந்தது. தற்போது, 2021-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான பணிகளை ஐபிஎல் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அதன்படி, நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரில் இருக்கும் 8 அணிகள் தங்களிடம் தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, அந்தந்த அணியினர் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் வீரர்களுக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் பிப். 4ம் தேதிக்குள் டிரேடு முறையில் வீரர்களை மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் வீரர்களுக்கான ஏலம் நடத்தப்படும். ஆனால் இதற்கான இடம் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. ஐபிஎல் ஏலம் தொடங்கவுள்ளதால், விடுவிக்கப்பட்ட வீரர்களை எந்த அணி வாங்கப்போகிறது என்பது குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…