ஆஸ்திரேலிய வீரரான ஆரோன் பிஞ்ச்சின் அடிப்படை தொகையாக ரூ.2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார். இவரை எடுக்க எந்த அணியும் முன்வராத காரணத்தினால், அவர் விற்காமல் போனார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி கேப்டனாக விளங்குபவர், ஆரோன் பிஞ்ச். இவர் ஆஸ்திரேலியா அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவர், ஐபிஎல் தொடரில் சென்னை, கொல்கத்தா அணியை தவிர மற்ற அனைத்து அணிக்காகவும் ஆடியுள்ளார்.
இதுவறை 87 போட்டிகள் ஆடிய பின்ச், 2005 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த முறை பெங்களூரு அணியில் இருந்த இவர், 12 போட்டிகள் விளையாடி 268 ரன்கள் குவித்தார். இந்தாண்டு ஐபிஎல் தொடரின் ஏலம் நேற்று நடைபெற்ற நிலையில், இவரை அடிப்படை தொகையாக ரூ.2 கோடிக்கு ஏலத்திற்கு வந்தார்.
இவரை எடுக்க எந்த அணியும் முன்வராத காரணத்தினால், அவர் விற்காமல் போனார். இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர். இவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஸ் லிக்கில் விட்ட்டோரியா அணியில் இருந்துள்ளார். இந்தாண்டு நடந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடிய பின்ச், 179 ரன்கள் அடித்து, 113.29 ஸ்ட்ரைக் ரேட்-ஐ கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் இவரை எந்த அணியும் எடுக்க முன்வராதாக கூறப்படுகிறது. பின்ச் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா வீரர்களான லபுஸ்சேன், மேத்யூ வேட், அலெக்ஸ் கேரி உள்ளிட்ட வீரர்களை எந்த அணியும் முன்வரவில்லை.
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, ஆளுநர்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணியில் உள்ள YMCA மைதானத்தில் நடைபெற்றது.…
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாத தொடக்க நாளான இன்று (மார்ச் 1) கிராமுக்கு ரூ.20 குறைந்துள்ளது.…
சென்னை : இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதலே பிறந்தநாள் கொண்டாட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இடையேயான வெள்ளை மாளிகையில் நடந்த…