IPL 2018:சென்னை அணி த்ரில் வெற்றி ..!பிராவோ மாஜாலாத்தால் சென்னை வெற்றி …!

Default Image

ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் போட்டியில் சென்னை அணிக்கு 166 ரன்களை மும்பை அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, முதலில் பந்து வீச தீர்மானித்தார்.

தொடக்கம் முதலே சென்னை பந்துவீச்சாளர்கள் கட்டுக் கோப்புடன் பந்துவீசினார்கள். முதல் பவர் பிளேவில் மும்பை அணி 6 ஓவர்களுக்கு 39 ரன்கள் மட்டுமே எடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா 15(18), லெவிஸ் 0(2) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர், இஷான் கிஷன், யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்து அடித்து விளையாடினர். இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் மும்பை அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின்னர் சூர்ய குமார் யாதவ் 43(29), கிஷன் 40(29) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் பாண்ட்யா சகோதர்கள் ஆட்டத்தை கையிலெடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா நிதானமாக விளையாடி 22(20) ரன்கள் எடுக்க, கருணாஸ் பாண்ட்யா 41(22) ரன்கள் குவித்து இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 166 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது .

அதனை தொடர்ந்து பேட்டிங்கிற்கு களமிறங்கிய சென்னை அணி  சுரேஷ் ரெய்னா 4 ரன்கள், அம்பத்தி ராயுடு 22 ரன்கள், டோனி 5 ரன்கள்,  ஹர்பஜன் 8 ரன்களுடனும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்நிலையில்  8-வது விக்கெட்டை இழந்தது இழந்தது சென்னை அணி.ஹர்டிக்  பாண்டியா வீசிய பந்தில் வுட் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.பிராவோ அதிரடியாக விளையாடி 68 ரன்கள் அடித்தார்.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில்   வெற்றி பெற்றது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்