இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, 215 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணியில், தொடக்க வீரரான அவிஷ்கா பெர்னாண்டோ 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு இறங்கிய குஷல் மெண்டிஸ்(34 ரன்கள்) மற்றும் நுவைந்து பெர்னாண்டோ(50 ரன்கள்) இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தனர். அடுத்து களமிறங்கிய அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து மூட்டையைக் கட்டினர். இதனால் அந்த அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது.
இறுதியில் இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் சிராஜ் சிறப்பாக பந்துவீசி தலா 3 விக்கெட்களையும், உம்ரான் மாலிக் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…