தென்னாபிரிக்கா அணியும் , இந்திய அணியும் தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றனர். நேற்று 2-வது டி20 போட்டி மொஹாலியில் உள்ள ஐ.எஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.
பிறகு இறங்கிய இந்திய அணி 19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியா அணியை வெற்றி பெற செய்தார்.
இப்போட்டியில் கோலி 52 பந்தில் 72 ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. மேலும் சர்வேதேச டி20 போட்டியில் மொஹாலி மைதானத்தில் அதிகபட்சமாக அடித்த ரன் பட்டியலில் மீண்டும் கோலி இடம் பிடித்து உள்ளார்.
இதற்கு முன் கோலி 2016 -ம் நடைபெற்ற சர்வேதேச டி20 போட்டியில் 82 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.அதன் பின்னர் மீண்டும் 72 ரன்கள் அடித்து அந்த பட்டியலில் இடம் பிடித்து உள்ளார்.
கோலி-82* (2016)
குப்தில் – 80 (2016)
கோலி – 72 * (2019)
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…