INDvsNZ ODI: ஷுப்மன் கில் இரட்டை சதம்! நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 349 ரன்கள் குவிப்பு.!

Published by
Muthu Kumar

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஷுப்மன் கில் இரட்டை சதத்துடன் இந்திய அணி, 349/8ரன்கள் குவிப்பு.

நியூசிலாந்து அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹைதராபாத்தில் இன்று தொடங்கிய, இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தபோது ரோஹித் 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்த விராட் கோலி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் 8 ரன்களுக்கும், இஷான் கிஷன் 5 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இறங்கிய சூர்யகுமார் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஒரு புறம் கில், பொறுப்புடன் விளையாடி தனது மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார், அவருடன் ஹர்டிக் பாண்டியா ஜோடி சேர்ந்து 74 ரன்கள் குவித்த நிலையில், ஹர்டிக் 28 ரன்களுக்கு போல்டானார். விக்கெட்கள் ஒருபுறம் விழுந்தது கொண்டிருக்க, கில் பொறுமையாக விளையாடி 145 பந்துகளில்(19 போர்கள், 8 சிக்ஸர்) தனது முதல் இரட்டை சதம் அடித்துள்ளார்.

இறுதியில் இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 349 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மன் கில், 208 ரன்கள்(19 போர்கள், 9 சிக்ஸர்) எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி மற்றும் டேரில் மிட்சேல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

Published by
Muthu Kumar

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago