#INDvsENG : காலமான முன்னாள் கிரிக்கெட் வீரரின் நினைவாக ..! கையில் கருப்பு பேண்ட் ..!

Published by
அகில் R

இந்தியா, இங்கிலாந்து அணி இடையிலான நடந்து கொண்டிருக்கும் 3-வது டெஸ்ட் போட்டியின், இன்றைய 3வது நாளில் இந்திய அணி வீரர்கள் தங்களது கையில் கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு விளையாடி வருகின்றனர். சமீபத்தில் காலமான இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்தியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருமான தத்தாஜிராவ் கெய்க்வாட் நினைவாக கையில் இவ்வாறு கருப்பு பேண்ட் அணிந்து கொண்டு விளையாடி வருகின்றனர் என்று பிசிசிஐ X சமூக தளத்தில் தெரிவித்துள்ளது.

#INDvsENG : அஸ்வினுக்கு பதில் இவரா..? எம்சிசியின் சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா..?

தத்தாஜிராவ் கெய்க்வாட், இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்தவர் ஆவார். எம்.எஸ் பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய கிரிக்கெட் அணி உருவாக்கப்பட்ட போது  தத்தாஜிராவ் கெய்க்வாட்  அந்த அணியின் முதல் கேப்டனாக நியமகிக்கபட்டார்.

தத்தாஜிராவ் கெய்க்வாட் அவர்களின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை 1952-1961 வரை இருந்தது. அதில் இடைப்பட்ட வருடங்களில் கெய்க்வாட் 11 டெஸ்டி போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.  கெய்க்வாட் ஒரு மிகசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். மேலும், அவர் விளையாடும் பொழுது களத்தில் ஒரு அற்புதமான பீல்டராகவும் செயல்படுவார்.

கடந்த பிப்ரவரி 13-ம் தேதி, கெய்க்வாட் அன்னாரது 95 வயதில் குஜராத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.  அந்த கிரிக்கெட் ஜாம்பவானினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தற்போது இங்கிலாந்து அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் போட்டியின் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தங்களது கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

57 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago