#INDvsENG : நாளை தொடங்கிறது 4-வது டெஸ்ட் போட்டி ..!

Published by
அகில் R

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.  இதில் இரு அணிகளும் அவர்களது திறமையை போட்டிக்கு போட்டி நிருபித்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதை தொடர்ந்து நாளை டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள JSCA இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கிவிடும்.

#IPL 2024 : சபாஷ் சரியான போட்டி ..! சர்ஃபராஸ் கானுக்கு போட்டி போடும் ஐபிஎல் அணிகள் ..!

நாளை நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த தொடரை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு இந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றும், மாறாக இங்கிலாந்து அணி இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கும். அதன் பின் இறுதியாக நடைபெறும் 5-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெரும் அணி இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றுவார்கள்.

நாளை தொடங்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், கே.எல்.ராகுல் இடம்பெற மாட்டார்கள். மேலும், பும்ராவிற்கும் இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் இடம் பெறுவார். மேலும், ஜெய்ஸ்வால், கில் மற்றும சர்ஃபராஸ் கான் நல்ல பார்மில் உள்ளனர்.

இதனால் இந்த போட்டியை பும்ரா, கோலி போன்ற பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களின் திறமையாலும், ரோஹித் மற்றும் ஜடேஜாவின் அனுபவத்தாலும் இந்திய அணி இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை டாஸ் போடும் போது தான் இந்திய அணியில் இடம்பெற போகும்  11 வீரர்கள் யார் என்பது தெரிய வரும்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago