இந்தியா-வங்கதேசம் மோதும் முதல் டெஸ்டின் உணவு இடைவேளை வரை இந்தியா 85/3 ரன்கள் குவிப்பு.
இன்று தொடங்கியுள்ள இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாததால், ராகுல் மற்றும் சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்த இந்த ஜோடி 41 ரன்களில் தனது முதல் விக்கெட்டாக சுப்மன் கில் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ராகுலும் 22 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு இறங்கிய விராட் கோலி 1 ரன்னில் வந்த வேகத்தில் கிளம்பினார்.
இதனால் இந்திய அணி 48 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாற, புஜாரா மற்றும் ரிஷப் பந்த் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்து வருகின்றனர். ஒருநாள் போட்டி போல் விளையாடி வரும் பந்த் 4 போர்கள் மற்றும் 1 சிக்ஸருடன் 29 ரன்களும், புஜாரா 12 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.
உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 85 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…