முக்கியச் செய்திகள்

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

Published by
அகில் R

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணியின் கில்லும், பண்டும் அணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக விளையாடி வந்தனர்.

இதில், இருவருமே மிகச் சிறப்பாகவே பேட்டிங்கில் ஜொலித்தனர். மேலும், இருவரும் சதம் அடித்து அசத்தினார்கள். அதில், சுப்மன் கில் 119* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அவருடன் விளையாடிய பண்ட் 109 ரன்கள் எடுத்து மெஹதி ஹசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு கே.எல்.ராகுல், கில்லுடன் இணைந்து விளையாடி வந்தார்.

சரியாக 64 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 514 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. அப்போது, இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா அந்த இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தார். இந்த முடிவை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் 5 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இரண்டரை நாள் மீதம் இருக்கும் நிலையில் இப்போதே பேட்டிங்கை டிக்ளேர் செய்தது சற்று யோசிக்க வைத்துள்ளது.

கையில் இரண்டு நாட்கள் இருப்பதால் இன்று முழுவதும் இந்திய அணி பேட்டிங் செய்வார்கள் என எதிர்பார்த்தனர். அதனால், ரோஹித் ஷர்மாவின் இந்த டிக்ளேர் முடிவு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. இரண்டரை நாள் இருப்பதால், நிர்ணயிக்கப்பட்ட இந்த 515 ரன்கள் என்பதை நிதானமாக விளையாடினால் கூட வங்கதேச அணியால் இலக்கை எட்டிவிட முடியும்.

இந்திய அணியின் வலுவான பவுலிங் பட்டாளத்தால் வங்கதேச அணி இன்றைய நாளை சமாளிப்பதே கடினமானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாகவே வங்கதேச அணி இந்த போட்டியை கையாண்டு வருகிறது.

அதன்படி, வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டுகளை இழக்காமல் அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர். இதனால், இந்த வலுவான கூட்டணி இன்று விக்கெட்டை இழக்காமல் நாளைய நாளும் தொடர்ந்தால் அடுத்தடுத்து களமிறங்கும் வங்கதேச வீரர்களுக்கு கடைசி நாள் இந்த இலக்கு எளிதானதாக அமைந்து விடும் என கருதப்படுகிறது.

இதனால், இந்தியா அணி பவுலர்கள் முடிந்த அளவுக்கு இன்று 5 விக்கெட்டுகளையாவது கைப்பற்ற வேண்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்திய அணி வங்கதேச அணியை கட்டப்படுத்துமா அல்லது வங்கதேச அணி இந்திய அணிக்கு சவாலாக இருப்பார்களா என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Published by
அகில் R

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

17 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

52 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

55 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago