இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆமைவேகத்தில் பந்துவீசிய காரணத்தால் நியூசிலாந்து அணிக்கு 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஆனது நடைபெற்று வருகிறது. நேற்று ஆக்லாந்தில் ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தது.274 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, இலக்கை எட்ட முடியாமல் 251 ரன்களுக்குள் சுருண்டது.இதனால் ஒருநாள் தொடரை 2-0 என்று நியூசிலாந்து கைப்பற்றியது.
இதற்கிடையில் இந்திய அணி பேட்டிங்கின் போது நியூசிலாந்து அணியானது மூன்று ஓவர்கள் மிகத் தாமதமாக பந்துவீசியதாக போட்டி நடுவர் அறிவித்தார். எனவே ஐசிசி விதிகளின் படி ஒவ்வொரு ஓவருக்கும் 20 சதவீதம் என்ற அடிப்படையில் நியூசிலாந்து அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் படம் தாறுமாறாக இருப்பதாக தங்களுடைய…
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…