இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர், வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், சென்னையில் நடைபெறவுள்ளது.
இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள், பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரையிலும், 2 வது டெஸ்ட் போட்டி, பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகுளும் அஹமதாபாதில் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வரும் 27 ஆம் தேதிக்குள் இரு அணி வீரர்களும் சென்னை வரவுள்ளார். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 3 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் அவர்கள் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்.
இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக சென்னையில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ரசிகர்களின்றி நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நடைபெறவுள்ள டி-20 தொடர் அனைத்தும் அஹமதாபாத்திலும், மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், புனேவில் நடைபெறவுள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…