#INDvENG: ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட முக்கிய வீரர்!

Published by
Surya

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொடரில் கலந்துகொள்ளும் வீரர்களின் பட்டியலை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆம் மற்றும் இறுதி டி-20 போட்டி, நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-2 என்ற கணக்கில் டி-20 தொடரையும் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர், வரும் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை புனேவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை இந்திய அணி அறிவித்தது. இதில் பும்ரா, ஷமி, ரவிந்திர ஜடேஜா, மயங்க் அகர்வால்க்கு வாய்ப்பு வழங்கவில்லை. அதற்கு பதில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி, இந்தியாக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் மோர்கன் கேப்டனாக பதவியேற்றார். ஜோப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும், புனேவில் உள்ள மைதானம் சுழற்பந்திற்கு சாதகமான மைதானம் என்பதால், அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சிலே சேர்க்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், ஜேஸன் ராய், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளே, அதில் ரஷித், மாட் பார்க்கின்ஸன், மார்க் உட் ஆகியோர் அணியில் உள்ளனர்.

Published by
Surya

Recent Posts

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

4 minutes ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

15 minutes ago

கரும்பு சாகுபடிக்கு ரூ. 10.63 கோடி…மலர் சாகுபடிக்கு ரூ.8 கோடி! பட்ஜெட்டில் வந்த முக்கிய அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…

1 hour ago

வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,

சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…

1 hour ago

முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…

2 hours ago

தமிழக வேளாண் துறையின் சாதனைகள்.., அமைச்சர் கூறிய நீண்ட பட்டியல்….

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…

2 hours ago