இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி, இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்குகொண்டு விளையாடுகிறது.அவ்வாறு முதல் ஒருநாள் போட்டியானது தருமசாலாவில் இரு அணிகளும் மோதுகிறது.
இந்திய அணியில் காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்றைய போட்டியில் களமிரங்குகிறார். தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். த்னது சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடுவதால் ரசிகர்களின் எகோபித்த ஆதரவும் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதே போல் புதியதாக தலைமை பதவியேற்றுள்ள டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியில் இளம் வீரர்கள் பலர் இடம் பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றியோடு ஒயிட்வாஷ் செய்ததுள்ளது.
இதனால் அணியின் தன்னம்பிக்கையை வெகுவாக அதிகரித்துள்ளது.அணியில் டூ பிளசிஸ், ஹெய்ன்ரிச் கிளாஸன், கைல் வெர்ரைன் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பெலுக்வாயோ, லுங்கி என்ஜிடி, அன்ரிச் நோர்ட்ஜே பந்துவீச்சீல் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார்கள்.எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்க தவறாது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…