புதிய சாதனை படைத்த இந்திய அணி …!100 வெற்றிகளை பதிவு செய்தது இந்திய அணி …!

Published by
Venu

இந்திய மண்ணில் நேற்றைய வெற்றியின் மூலம் தனது 100 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 649 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.
இதன்மூலம், 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 4, முகமது ஷமி 2 விக்கெட் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 468 ரன்கள் பின் தங்கியதால் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இந்தியா ‘பாலோ ஆன்’ கொடுத்தது.இதன் பின் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார்.இதனால் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சதம் அடித்த அறிமுக பிரித்திவி ஷா ஆட்டநாயகன் விருதை பெற்றார்.இந்த போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு மிகப்பெரிய தோல்வி ஆகும்.
இந்நிலையில்  இந்திய மண்ணில் 266 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ள இந்திய அணி,நேற்றைய வெற்றியின் மூலம் தனது 100 வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளை வென்ற நான்காவது அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago