3 விக்கெட்டை இழந்து இந்திய அணி முதல் நாளிலேயே தடுமாற்றம்..!

Published by
murugan

இந்திய அணி தற்போது 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனையடுத்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.

இதனால், தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களம் கண்ட புஜாரா 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால் கேப்டன் கோலி முதல் 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், ரசிகர்கள் எதிர்ப்பட்டது போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல்  7 ரன் எடுத்து விராட் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். இந்திய அணி இழந்த 3 விக்கெட்டையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பறித்தார். அதிலும், குறிப்பாக கே.எல் ராகுல், புஜாரா, கோலி 3 பேரும் ஜோஸ் பட்லரிடம் கேட்சை கொடுத்து விக்கெட்டை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி தற்போது 25 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 49 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் ரோஹித் 14, ரகானே 16 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Published by
murugan
Tags: ENGvIND

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago