முதல் இன்னிங்சில் 396 ரன்கள் குவித்த இந்திய அணி..!

Published by
murugan

இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் சர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த  சுப்மன் கில் சிறிது நேரம் நிதானமான விளையாடி  34 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு  ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினர்.  பின்னர் களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் கூட்டணி அமைத்து  நிதானமாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினர். இருப்பினும் ஷ்ரேயாஸ் ஐயர் 27 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இவர்கள் கூட்டணியில் 110 ரன்கள் சேர்க்கப்பட்டது.

இரட்டை சதம் அடித்தது அசத்தல்.. கோலி, ரோஹித் சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால்..!

பின்னர் களம் கண்ட ரஜத் படிதார் 32, அக்சர் படேல் 27,  ஸ்ரீகர் பாரத் 17 ரன்கள் அடுத்தடுத்து விக்கெட் இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்தனர். களத்தில்  ஆட்டமிழக்காமல் ஜெய்ஸ்வால் 179* ரன்களுடனும்  மறுபுறம்  அஸ்வின் 5* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல்  இருந்தனர். இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

சிறப்பாக விளையாடி வந்த தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பாரா ..? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களை ஏமாற்றாமல் இரட்டை சதம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார். இதன்முலம் ஜெய்ஸ்வால் 277 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இதன் போது அவர் 18 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார்.

அவர் 275 பந்துகளில் 191 ரன்கள் எடுத்து இருந்தபோது அடுத்தடுத்து சிக்ஸர் , பவுண்டரி விளாசி இரட்டை சதம் அடித்தார். இருப்பினும் அடுத்த சில நிமிடங்களில்  209 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இறங்கிய அனைத்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க இறுதியாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில்  112 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 396 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அகமது தலா 3 விக்கெட்டை பறித்தனர்.

 

Published by
murugan

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

1 second ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

21 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

25 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

40 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

52 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago