இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி …!சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி..!

Default Image

மேற்கிந்திய தீவுகள் அணி அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி  இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்தியாவுடனான முதல் டெஸ்டின் 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 94 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்கள் பின்தங்கி உள்ளது.
இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 649 ரன்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பிஷூ அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள திணறிய அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியனுக்கு திரும்பினர்.

இதன்மூலம், 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்று 3 ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது.  மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா அணியின் பந்துவீச்சில் அஷ்வின் 4, முகமது ஷமி 2 விக்கெட் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி  முதல் இன்னிங்சில் 468 ரன்கள் பின் தங்கியதால் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. இந்தியா ‘பாலோ ஆன்’ கொடுத்தது.இதன் பின்  மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்சில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 5 விக்கெட் வீழ்த்தினார்.இதனால் இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்