நாளை கடைசி டெஸ்ட் போட்டி !வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

Default Image

இந்திய அணி நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன்பின்னர் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இறுதியாக இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.கடந்த 21-ஆம் தேதி முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி நாளை  நியூசிலாந்தில் உள்ள கிரைஸ்ட் சர்ச் நகரில் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றிபெற்று தொடரை சமன் செய்யும் என்று இந்திய ரசிகர்களும்  எதிர்பார்பில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்