இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் தற்போது அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வவருகிறது.
இதுவரை நடைபெற்ற 4 டி-20 போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சமமாக உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்ட்யா, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், க்ருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், சிராஜ், பிரசீத் கிருஷ்ணா, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆனால், தற்போது நடைபெற்று வரும் டி-20 தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…