இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. துபாய்க்கு இந்திய அணியுடன் மூன்று காத்திருப்பு வீரர்கள் செல்கின்றனர். இது தவிர, துபாய்க்கு அணியுடன் பயணம் செய்யாத நான்கு ரிசர்வ் வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியின் கேப்டனாக உதய் சஹாரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியகோப்பை போட்டிகள் டிசம்பர் 8 ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக உள்ளது. 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி அதிகபட்சமாக 8 கோப்பைகளை வென்றுள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசியக்கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணி:
அர்ஷின் குல்கர்னி, ஆதர்ஷ் சிங், ருத்ரா மயூர் படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷு மோலியா, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), ஆரவெல்லி அவனிஷ் ராவ் (விக்கெட் கீப்பர் ), சௌமி குமார் பாண்டே (துணை கேப்டன் ), முருகன் அபிஷேக், இன்னேஷ் மகாஜன், தனுஷ் கௌவாட், ஆராத்யா சுக்லா, ராஜ் லிம்பானி, நமன் திவாரி.
காத்திருப்பு வீரர்கள்– பிரேம் தேவ்கர், அன்ஷ் கோசாய், முகமது அமன்.
ரிசர்வ் வீரர்கள்: திக்விஜய் பாட்டீல், ஜெயந்த் கோயத், விக்னேஷ், கிரண் சோர்மலே
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…