ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை அறிவித்த பிசிசிஐ.
19 வயதிற்குட்பட்டோருக்கான #WorldCup2022 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸில் ஜனவரி 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், ஐசிசி U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. யாஷ் துல் தலைமையிலான இளம்படையில் தமிழக வீரர் மனோவ் பாரக் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்திய அணியின் முதல் போட்டி ஜன.15-ம் தேதி தென்னாப் பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. 2வது போட்டி ஜன.19-ஆம் தேதியும், 3வது மற்றும் கடைசி போட்டி ஜன.22-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. முதல் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி இரண்டு போட்டிகள் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி U-19 உலகக்கோப்பை – இந்திய அணி வீரர்கள்:
யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, எஸ்கே ரஷீத் (துணை கேப்டன்), நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனிஷ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கவுஷல் தம்பே, ஆர்எஸ் ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓட்ஸ்வால், ரவிக்குமார், கர்வ் சங்வான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…