ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் இருந்து விஹாரி விலகினார்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் உள்ளன. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக விஹாரி விலகியுள்ளார். இதற்கு முன் வயிற்று வலி காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரீத் பும்ராவும் விலகியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிக வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
3-வது டெஸ்ட் போட்டியில் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு காயம் ஏற்பட்டது. ஆனால் ரவீந்திர ஜடேஜா விளையாடவில்லை, பண்ட் விளையாடினார். மேலும், இந்தத் தொடரின் போது முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இப்போட்டி தி கப்பா, பிரிஸ்பேன் என்ற மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…